திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த செ.சொர்ப்பணந்தல் கிராமத்தில் நேரு யுவகேந்திரா, டாக்டர் .பி.ஆர்.அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து செங்கம் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.நிகழ்விற்கு நேரு யுவகேந்திரா மாவட்ட அலுவலர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.சுவாமி விவேகானந்தர் மிஷின் தலைவர் ஜெயபிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் காஞ்சனா பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நேரு யுவகேந்திரா தேசிய இளையோர் தொண்டர் சூர்யா அனைவரையும் வரவேற்று பேசினார்.ஒன்றிய கவுன்சிலர் விநாயகம் திட்டத்தின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தார். செங்கம் வட்டார அளவிலான நடைபெற்ற கபாடி , வாலிபால் விளையாட்டு போட்டியில் செங்கம் ஒன்றியத்தைச் சார்ந்த பரமனந்தல், அம்மாபாளையம், கொட்டகுளம் , இறையூர் , சொர்ப்பண ந்தல், மேல்பென்னாத்தூர், 40க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருந்து அணிகள் கலந்து கலந்துகொண்டு இறையூர் அணி முதலிடத்திலும்,சொர்ப்பண ந்தல் அணி இரண்டாம் இடத்திலும் அம்மாபாளையம் மூன்றாம் இடத்திலும் வெற்றி பெற்றது வெற்றி பெற்ற அணிகளுக்கு ஒன்றிய கவுன்சிலர் விநாயகம் ஊராட்சி மன்ற தலைவர் காஞ்சனா பாபு நேரு யுவகேந்திரா மாவட்ட அலுவலர் ராமச்சந்திரன் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.கிராம நிர்வாக அலுவலர் திருமால் ஊராட்சி செயலாளர் ஏழுமலை கிராம உதவியாளர் கோவிந்தன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் சி எம் பிரகாஷ் கூட்டுறவு சங்க தலைவர் சமூக ஆர்வலர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் முடிவில் தேசிய இளையோர் தொண்டர் புகழேந்தி நன்றி கூறினார்
9
You must be logged in to post a comment.