9
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா டோல்கேட்டில் நள்ளிரவு பள்ளிகொண்டா டோல்கேட்டில் வாகன தணிக்கை செய்துகொண்டு இருந்தனர்.அதில் ஒரு கார் நிற்காமல் சென்றது. உடனே சுதாகரித்து கொண்ட காவல்துறை விரட்டினர். அப்போது கார் நின்றது. அதிலிருந்த ஒரு நபர் தப்பி ஓடினான். மற்ற 3 பேரை காவலர்கள் பிடித்தனர்.காரில் சோதனை செய்த பேரது 8 மூட்டைகளில் குட்கா பொருளும், 10 மூட்டைகளில் புகையிலை பொருள்களும் இருந்தன.விசாரணையில் திருவள்ளூவர் மாவட்டம் மணவாளன் நகரை சேர்ந்த ரமேஷ் (27), மனோரி (26) மற்றும் பெங்களூரு சுல்தான்பூர் பகுதியை சேர்ந்த சுனில் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய ராஜய்தானை சேர்ந்த சத்தியபால் என்பவனை காவல்துறை தேடிவருகிறது..கைப்பற்றப்பட்ட குட்கா, மற்றும் புகையிலை மதிப்பு ரூ1.20 லட்சமாகும்.
You must be logged in to post a comment.