Home செய்திகள் பள்ளிகொண்டா டோல்கேட்டில் குட்கா, புகையிலை பொருள் பறிமுதல். 3 பேர் கைது, ஒருவர் ஓட்டம்

பள்ளிகொண்டா டோல்கேட்டில் குட்கா, புகையிலை பொருள் பறிமுதல். 3 பேர் கைது, ஒருவர் ஓட்டம்

by mohan

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா டோல்கேட்டில் நள்ளிரவு பள்ளிகொண்டா டோல்கேட்டில் வாகன தணிக்கை செய்துகொண்டு இருந்தனர்.அதில் ஒரு கார் நிற்காமல் சென்றது. உடனே சுதாகரித்து கொண்ட காவல்துறை விரட்டினர். அப்போது கார் நின்றது. அதிலிருந்த ஒரு நபர் தப்பி ஓடினான். மற்ற 3 பேரை காவலர்கள் பிடித்தனர்.காரில் சோதனை செய்த பேரது 8 மூட்டைகளில் குட்கா பொருளும், 10 மூட்டைகளில் புகையிலை பொருள்களும் இருந்தன.விசாரணையில் திருவள்ளூவர் மாவட்டம் மணவாளன் நகரை சேர்ந்த ரமேஷ் (27), மனோரி (26) மற்றும் பெங்களூரு சுல்தான்பூர் பகுதியை சேர்ந்த சுனில் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய ராஜய்தானை சேர்ந்த சத்தியபால் என்பவனை காவல்துறை தேடிவருகிறது..கைப்பற்றப்பட்ட குட்கா, மற்றும் புகையிலை மதிப்பு ரூ1.20 லட்சமாகும்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!