6
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரை மாநகராட்சி சிம்மக்கல் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட வட்டாட்சியர் பாலாஜி அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார்.இல்லத்தின் மேலாளர் கிரேசியஸ் வரவேற்று பேசினார். முதியோர்கள் மகிழ்ச்சியுடன் உணவை ஏற்றுக்கொண்டனர்.நிகழ்வில் கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் செந்தில்குமார், முன்னால் ராணுவ வீரர் சந்திரசேகர், மாற்றம் தேடி பாலமுருகன், உதவும் உள்ளம் பெரியதுரை, முருகாணந்தம், இராமனழகு அறக்கட்டளை நிறுவனர் முராபாரதி, உண்ணுங்கள் பருகுங்கள் வீணாக்காதீர்கள் அமைப்பின் நிறுவனர் ஷேக்மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.