Home செய்திகள் கடையநல்லூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மறைவு..

கடையநல்லூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மறைவு..

by mohan

கடையநல்லூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ அப்துல் ரசாக் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் காலமானார். அவரது இறுதிச்சடங்கில் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் அப்துல் ரசாக் ( 78 ). திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவரை தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 22.01.22 பகல் 12 மணி அளவில் காலமானார். இவரது இறுதி சடங்கு நேற்று மாலை 4 மணி அளவில் அவரது சொந்த ஊரான செங்கோட்டை அருகே உள்ள வடகரை கிராமத்தில் அரபாத் ஜும்ஆ பள்ளிவாசல் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவர் 1977-1980 வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தார். இவருடைய பதவி காலத்தில் வடகரை ஆரம்ப சுகாதார நிலையம் ,வாவாநகரம் உயர் நிலை நீர் தேக்கத் தொட்டி, கடையநல்லூர் நகராட்சியில் விரிவாக்க கட்டிடம், கிராமப்புறங்களுக்கு போக்குவரத்து வசதி, ஏராளமான படித்த இளைஞர்களுக்கு அரசுத் துறையில் வேலை வாங்கிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல் ரசாக்2001 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்து மாநில சிறுபான்மை பிரிவு துணைத் அமைப்பாளராக பதவி வகித்து வந்தார். அவருக்கு ரஜப் முகம்மது, முஹம்மது செரிப் என்ற 2 மகன்கள் உள்ளனர். இறுதிச் சடங்கில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் பாளையங்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோதர் மைதீன் உட்பட திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமான பிரமுகர்கள் அவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!