செங்கோட்டை அருகே சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட 04 நபர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராதாபுரம் காலனி அருகே சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டு கொண்டிருப்பதாக காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் பேரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மாரியப்பன் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த நபர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இதுகுறித்து சார்பு ஆய்வாளர் சின்னத்துரை விசாரணை மேற் கொண்டு மேற்படி மணல் திருட்டில் ஈடுபட்ட இடைகால் பகுதியை சேர்ந்த மாரியப்பன் (50), பண்பொலியை சேர்ந்த கிருஷ்ணசாமி (38), குத்துக்கல் வலசையை சேர்ந்த மகேந்திரன் (29) மற்றும் இசக்கிதுரை (24) ஆகிய 04 நபர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தார். மேலும் அவர்களிடமிருந்து திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட 02 லாரிகள் மற்றும் 01 JCB இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.