9
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுண்ணாம்பு பேட்டையைசேர்ந்தவர் பாலாஜி (35). இவர் ஆந்திர எல்லையில் உள்ள சோதனை சாவடியில் இரவு காவலராக பணியாற்றி வந்தார். நேற்று காலை பணி முடித்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டு இருந்தபோது சுமார் 8 மணியளவில் கொட்டமிட்டா சாலையில் எதிரே வந்த மினிவேன் மோதி சம்பவ இடத்தில் காவலர் பாலாஜி உயிரிழந்தார்.இது குறித்து குடியாத்தம் தாலுகா காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
You must be logged in to post a comment.