2 கோடியே 15 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது என்பதற்கு பதிலாக கொரோனா நிவாரண நிதி வழங்கப்படுகிறது என கூறிய அமைச்சர் சக்கரபாணிவிவசாயிகளிடத்தில் குறைந்த விலைக்கு கரும்பு கொள்முதல் செய்ததாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த தமிழக உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்தார் செய்தியாளர்கள் சந்திப்பில் திருத்தணியில் தந்தை மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்யப்பட்டதால் மகன் தற்கொலை செய்த சம்பவம் குறித்த கேள்விக்கு பல்லி இறந்து கிடந்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் கோட்டாட்சியர் சம்பந்தப்பட்ட பொருளை கொண்டு வர கேட்டபோது அவர் வேறு பொருளை மாற்றிக் கொண்டு வந்ததால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்டதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என தெரிவித்தார்.கரும்பு கொள்முதல் அரசு நிர்ணயித்த விலையை விட குறைந்த விலைக்கு அதிகாரிகள் கொள்முதல் செய்ததாக விவசாயிகள் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு இதுதொடர்பாக இந்த புகார் சம்பந்தமாக முதல்வர் விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த விலையை கொடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார் இந்த அடிப்படையில் தான் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது இதில் எந்த தவறும் நடக்கவில்லை என தெரிவித்தார் அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என கேட்டதற்கு குறைந்த விலைக்கு கொள்முதல் செய்ததாக சுட்டிக் காட்டினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் தொடர்ந்து பேசிய அமைச்சர் சக்கரபாணி தமிழகம் முழுவதும் 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதற்கு பதிலாக கொரோனா நிவாரண நிதி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 90% வழங்கப்பட்டுள்ளதாகவும் மதுரையை பொறுத்தவரை 80% வழங்கப்பட்டுள்ளதாகவும் ஓரிரு தினங்களில் அனைவருக்கும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.