விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் இராஜபாளையம் நகர் பகுதியில் அடிப்படை வசதிகளான வாறுகால் வசதி .சாலை வசதி .மற்றும் முதியோர் பென்சன் .ரேஷன் கடைகளில் கைரேகை சரியாக செயல்படதாதல் பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் அதற்கு தீர்வு காணும் விதமாக வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அனைவரையும் அழைத்து வந்து மக்களை சந்தித்து உடனடி தீர்வு காணும் விதமாக மக்கள் சந்திப்பு இயக்கம் என்ற பெயரில் மக்களை சந்தித்து வருகிறார் .அதன் அடிப்படையில் பச்சமடம் .மங்காபுரம் .பெரியமாரியம்மன் கோவில் .பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீண்டும் மக்களை சந்தித்து அவரிடம் மனுக்களை பெற்று தீர்வுகாணும் விதமாக அதிகாரிகள் உடனடியாக தீர்வு காணப்பட்டது .மேலும் பொதுமக்கள் மனு எழுதுவதற்க்காக ஏதுவாக அந்தந்த பகுதியில் கம்ப்யூட்டர் மூலம் மனுக்களை ஆன்லையன் மூலம் (இ.சேவை)வசதியாக ஏற்பாடு செய்து மக்களுக்கு தீர்வு காணப்பட்டது பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.