கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ள சங்க அலுவலகத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் பிரபுக்கள் தெரு, ஜின்னா தெரு, மதார் அம்பலம் தெரு, அத்திலை தெரு, NMT தெரு, சேரான் தெரு, லெப்பை தெரு, ஆடருத்தான் தெரு, சாலை தெரு ஆகிய பகுதிகளில் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
இந்த முகாமை சங்கத்தின் தலைவர் ஆலிம் தவ்ஹீத் ஜமாலி தலைமையேற்று நடத்தினார், அல் மத்ரஸத்துர் ராழியாவின் தாளாளர் அஹமத் சுஹைல், சட்ட ஆலோசகர் முஹம்மது சாலிஹ் ஹூசைன், ஆலோசகர் மசூத் அஹமத் ஆகியோர் துவக்கி வைத்தனர்.முகாம் ஏற்பாடுகளை சங்கத்தின் பொருளாளர் சல்மான் கான்,சங்கத்தின் உறுப்பினர்கள் சுகைல், சைபுல்லாஹ், அசிம் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர். இந்த முகாமின் மூலம் 2000 க்கும் அதிமாக பொதுமக்கள் பயன்பெற்றனர். இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சங்க பொருளாளர் சல்மான் கான் கூறினார்.
You must be logged in to post a comment.