கீழக்கரை கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்கரையில் சுமார் 20 வயது மதிக்கதக்க ஆண் சடலமாக கரை ஒதுங்கி கிடப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அங்குள்ள கடலோர காவல்துறைக்கு தகவல் அளித்தனர் அதைத்தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி இராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கிஅனுப்பி வைத்தனர்.

இறந்து போனவரின் சட்டையில் கல்லூரி ஐ.டி கார்டு இருந்தது. அதில் கீழக்கரை அடுத்துள்ள காஞ்சிரங்குடி ஊரை சேர்ந்த கார்மேகத்தின் மகன் தாமஸ் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.மேலும் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..