மாநிலம் முழுவதும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அம்மா உணவகம் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதா அவர்களின் உருவப்படத்திற்குஅதிமுக நகர் கழகம் சார்பில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் மற்றும் வடக்கு நகர செயலாளர் துரைமுருகேசன் மற்றும் தெற்கு நகர செயலாளர் பரமசிவம் ஆகியோர் தலைமையில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.மேலும் கழகம் காப்போம் எனவும், அம்மா புகழ் ஓங்குக என கோஷங்கள் எழுப்பினர். நிகழ்ச்சியில் உடன் தெற்கு ஒன்றிய செயலாளர் மாவட்ட இணைச் செயலாளர் அழகுராணி நகர மகளீர் அணிசெயலாளர் ராணி மற்றும் கட்சி நிர்வாகிகள் உருப்பினர்கள் மகளீர் அணியினர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்..
.செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.