மதுரை மாவட்டத்தில் கல்விக் கடன் முனைப்பு திட்டம்: அக். 20-ல் கல்விக் கடன் மேளா.

மதுரை மாவட்டம்அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் பிற பள்ளிகளில்பயின்ற மாணவ மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்கு கல்விக்கடன் பெறஉதவும் வகையில் மதுரை மாவட்டத்தில், கல்விக்கடன் முனைப்பு திட்டம் மதுரை 2021 – 2022 என்ற சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தெரிவித்தார். மதுரை மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் பிற பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில பொருளாதார சூழல் தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் அவர்களின் மேற்படிப்பிற்கு உதவிட ஏதுவாக கல்விக்கடன் பெற உதவும் வகையில் சிறப்பு திட்டத்தினை மதுரை மாவட்டத்தில் நடப்பு 2021-2022-ஆம் கல்வி ஆண்டில் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு, கல்விக்கடன் முனைப்பு திட்டம் மதுரை 2021 -2022 எனப் பெயரிடப்பட்டுள்ளது.இத்திட்டத்தினை, செயல்படுத்த ஏதுவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்ஆ-பிரிவில் ஒரு உதவி மையம் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.மேலும், இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திடும் வகையில், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் (20.10.2021) புதன் கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ”கல்விக்கடன் மேளா” என்ற சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்மேளாவில், மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் கலந்து கொள்கின்றன. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு அனைத்து மாணவ, மாணவிகள் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..