மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட கரடிக்கல் கிராமத்தில் சுந்தர் ராஜ் என்பவர் சொந்தமான பசுமாடு ஒன்று மேய்ச்சலுக்காக காலை ஓட்டிச் சென்றுள்ளார் அப்போது எதிர்பாராதவிதமாக ஆண்டிச்சாமி என்பவர் கிணற்றில் தவறுதலாக பசு மாடு கீழே விழுந்து விட்டது இதை மீட்க அப்பகுதி மக்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை இது குறித்து ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்திற்கும் மற்றும் திருமங்கலம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக் குழுவிற்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலைய அலுவலர் ஜெயராணி தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி பசுமாட்டை உயிருடன் மீட்டனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.