11
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மைச் சட்ட மசோதாவை திருப்ப பெற வேண்டும் அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது 100 நாள் வேலைத்திட்டததை 200 நாளாக உயர்த்திட வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மா.கம்யூனிஸ்ட் -இ.கம்யூனிஸ்ட்- பார்வர்ட் பிளாக- காங்கிரஸ-; திமுக உள்பட திமுக கூட்டணிக்கட்சிகள் சார்பில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
இதில் மத்திய அரசைக் கண்டித்தும் வேளாண்மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பபட்டன.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் அவர்களை போலிசார் கைது செய்தனர்.இதில் ஆண்கள் பெண்கள் உள்பட சுமார் 75 பேரை போலிசார் கைது செயயப்பட்டனர்.இச்சம்பவத்தால் தேவர் சிலை முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.