தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் அதிமுக சார்பில் கீழக்கரை நகர் கழக செயலாளர் ஜகுபர்உசேன் தலைமையில் இந்துபஜாரில் பெட்ரோல், டீசல், கேஸ் விலைவாசி உயர்வு, நீட் தேர்வு விவகாரம், குடும்பத்தலைவிக்கு மாதம் 1000 வழங்காத திமுக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நகர கழக துணை செயலாளர் குமரன், நகர கழக பொருளாளர் அரிநாராயணன், அம்மா பேரவை செயலாளர் சரவணபாலாஜி, MGR.மன்ற செயலாளர் G.K.வேலன், சுரேஷ் ex MC, முகேஷ் பிரதீபன்,தகவல் தொழில் நுட்ப பிரிவு நகர் செயலாளர சுரேஷ், 4வது வார்டு ஹக்கீம் 18வது வார்டு தபுழானம், ஜேம்ஸ் மாவட்டபிரதிநிதி, வேலயுதாகுமார் 21 வார்டு பிரதிநிதி, முகைதீன் அப்துல் காதர், மற்றும் கீழக்கரை நகர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.