வேளாண்துறையில் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கு : அதிகாரி தட்சிணாமூர்த்தியை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவு

கடந்த 2013 ஆண்டு 2021 வரை ரூபாய் 1000 கோடி முறைகேடு செய்துள்ள வேளாண்துறையில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் முறைகேடில் ஈடுபட்டுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ள IAS அதிகாரி தட்சனாமூர்த்தி யை வழக்கில் எதிர் மனுதாராக சேர்க்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அப்துல்லா தாக்கல் செய்த பொதுநல மனு,

அதில்: “தமிழ்நாடு வேளாண்மைத் துறை சார்பில் வழங்கக்கூடிய மானியத் திட்டங்களை கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் வேளாண் இயக்குநர்கள், அதிகாரிகள், உதவியாளர்கள் என பலர் முறைகேடாக பல்வேறு வேளாண் திட்டங்களை போலி விவசாயிகளுக்கு வழங்கியுள்ளனர், கடந்த 2016 முதல் 2021 வரை வேளாண் இயக்குநர் தக்ஷினாமூர்த்தி முன்னாள் வேளாண்துறை அமைச்சரின் உறவினர் என்பதால் பல முறைகேடுகள் செய்துள்ளார்,ட்டுநீர் பாசன உபகரணங்களை வழங்கும் திட்டம், மானிய இயந்திரங்கள் கொள்முதல், விதை கொள்முதல், “பிக்கோ கோமிரா”, டேப்லெட், கணினி கொள்முதல் திட்டம், தமிழ்நாடு நீர்நிலை மேம்பாட்டு முகமை திட்டம், நிலையான நீர்ப்பாசன திட்டம், உழவர் உற்பத்தியாளர் குழு திட்டம், டெல்டாவில் குறுவை மற்றும் சம்பா தொகுப்பு திட்டம்,விதை கொள்முதல் திட்டம், பயிர் காப்பீட்டு திட்டம் ஆகிய திட்டங்களை போலி விவசாயிகளுக்கு வழங்கியுள்ளார். இந்த திட்டங்களை செயல்படுத்தி ரூபாய் 1000 கோடி அளவிற்கு மோசடி செய்துள்ளனர், வேளாண் இயக்குநர் தட்சனாமூர்த்தி மீது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது, வழக்கு மீது எவ்வித நடவடிக்கை இல்லை. மேலும் கடந்த 2021 ம் ஆண்டு தேர்தல் விதிமுறைகள் மீறி விவசாயிகளுக்கு புயல் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். இதனால் உண்மையான விவசாயிகள் எவ்வித பலன்களை அனுபவிக்க முடியாமல் உள்ளனர். இது போன்ற முறைகேடில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் சிலர் தற்போது பணி ஓய்வு மற்றும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடி மற்றும் முறைகேட்டில் ஈடுப்பட்டுள்ளவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க பல மனுக்கள் மற்றும் புகார்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை, எனவே கடந்த 2013 ஆண்டு 2021 வரை ரூபாய் 1000 கோடி முறைகேடு செய்துள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது வழக்கில் புகார் கூறப்பட்டுள்ள IAS அதிகாரி தட்சனாமூர்த்தி யை வழக்கில் எதிர் மனுதாராக சேர்க்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..