மருத்துவமனை சென்று திரும்பிய கணவன் மனைவியிடம் செயின் பறிப்புபைக் ஆசாமிகள் கைவரிசை.

மதுரைபழங்காநத்தம் ஆர்சி தெருவை சேர்ந்தவர் ஜெயசீலன் 45.இவர் பைக்ஓட்டிச் செல்ல மனைவி பின்புறமாக அமர்ந்திருந்தார் .இருவரும் மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.இவர்கள் பைபாஸ் ரோடு காளவாசல் பாலத்தில் சென்றபோது பின் தொடர்ந்துபைக்கில் வந்த 2 ஆசாமிகள் ஜெயசீலன் மனைவி அணிந்திருந்த 8 பவுன் தாலி செயினை பறித்து தப்பி சென்று விட்டனர் .இந்த செயின் பறிப்பு தொடர்பாக ஜெயசீலன் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்துசெயின்பறித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..