தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் வெற்றி பெறவில்லை என்றாலும், தமிழகத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்ட வேட்பாளர்களிலேயே அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போதும், தேர்தல் முடிவுகளின் போதும் தமிழக மக்களின் கவனத்தை தன்பக்கம் திருப்பியவர் ஹரிநாடார். எப்போதும் சுமார் 10 கிலோ தங்க நகைகளை அணிந்து கொண்டு நடமாடும் இவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். மேலும் தேர்தல் முடிவுகள் வெளியான போதும் அனைவரின் கவனத்தையும் அவர் ஈர்க்க காரணம் தமிழகத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்ட வேட்பாளர்களில் ஹரிநாடார் தான் 37, 727 வாக்குகளைப் பெற்றுள்ளார். மேலும் ஹரிநாடார் போட்டியிட்ட ஆலங்குளம் தொகுதியில் திமுக சார்பில் பூங்கோதை ஆலடி அருணா மற்றும் அதிமுக சார்பில் மனோஜ் பாண்டியன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் அதிமுக மனோஜ் பாண்டியன், 3, 539 வாக்குகள் அதிகம் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணாவை வென்றார். அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 74, 153 வாக்குகளும், திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா 70, 614 வாக்குகளும் பெற்றனர். இந்நிலையில், 37, 727 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்ததோடு, பிரதான கட்சிகள் வரிசையிலும் சுயேட்சை வேட்பாளரான ஹரி நாடார் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.