Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் அரசு விதிமுறைகளை பின்பற்ற உத்தரவு….

கீழக்கரையில் அரசு விதிமுறைகளை பின்பற்ற உத்தரவு….

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள வர்த்தக சங்கத்தினருடன் கீழக்கரை வட்டாட்சியர் முருகேசன், நகராட்சி ஆணையாளர் பூபதி,காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் தற்சமயம் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அரசு விதிமுறைகளை பின்பற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் அரசு அறிவித்துள்ள படி 1.பால் கடை,மருந்தகம் முழு நேரமும் செயல்பட அனுமதி. 2.காய்கறிகடை,மளிகைக்கடை,டீக்கடை (தேநீர் கடை) ஆகியவை நண்பகல் 12 மணிவரை செயல்பட அனுமதி. 3.குறிப்பிட்ட நேரங்களில் ஹோட்டலில் பார்சல் உணவுக்கு மட்டும் அனுமதி. 4.அவசர தேவையான மருத்துவமனை செல்ல அனுமதி. 5.பிற அனைத்து கடைகள்,வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதியில்லை. 6.தேவையில்லாமல் வெளியில் வருபவர்கள் மீதும் வாகனம் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும். பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும்,சமூக இடைவெளி போன்ற அரசு உத்தரவுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!