மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே அய்யன் பாப்பாக்குடி கண்மாயில் இன்று மதியம் இரண்டு சிறுவர்கள்சென்றுள்ளனர் . கூறப்படுகிறது அந்தப் பகுதியில் அமர்ந்திருந்த ஒரு நபர் சிறுவர்கள் தண்ணீரில் தத்தளித்த தாக காவல்துறைக்கும் மற்றும் மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த மதுரை டவுன் நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் கண்மாய்க்குள் இறங்கி தேடிவந்தனர். ஆகாயத்தாமரை அதிகம் அடர்ந்துள்ள கண்மாயில் எந்தவித உடலும் சிக்கவில்லை மேலும் அப்பகுதி பொதுமக்களிடம் விசாரணை செய்த காவல்துறை அப்பகுதியில் எந்தவிதமான சிறுவர்களும் காணவில்லை பெற்றோர்கள் ஒருவரும் எந்த ஒரு புகாரும் வரவில்லை எனவும் தகவல் தெரிவித்தனர் மேலும் இரவு நேரம் ஆனதால் ஏதேனும் பெற்றோர்கள் சிறுவர்களை காணவில்லை என புகார் கொடுத்தால் மீண்டும் தேடும் பணி தொடங்கும் என காவல்துறையும் மற்றும் மதுரை டவுன் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தகவல் தெரிவித்தார்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.