தென்காசி மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது: தென்காசி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் கொரோனா தொற்று நோய் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும், கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அரசு நடைமுறைபடுத்தியுள்ள விதிகளை மீறி செயல்படுவோர் தொடர்பான புகார்களை அளித்திடவும் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அவசர கால செயல்பாட்டு மையம் தொலைபேசி எண்கள். 04633-290548 அல்லது 1077 மற்றும் கொரானா தொற்று நோய் தொடர்பான ஆலோசனைகளை 04633 – 281100, 04633 – 281102, 04633 -281105 ஆகிய தொலைபேசி எண்களில் பொதுமக்கள் எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம். மேலும், பொதுமக்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். அலுவலகம் மற்றும் தொலைபேசி எண் விவரம் வருமாறு: 1. தென்காசி (நகராட்சி அலுவலகம்) 04633 – 222228, 2.சங்கரன்கோவில் (நகராட்சி அலுவலகம்) 04636 – 224719, 3.கடையநல்லூர் (நகராட்சி அலுவலகம்) 04633 – 240250, 4.செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 04633 – 233058, 5. கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 04633 – 250223, 6.வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 04636 – 241327, 7. குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 9442584129, 8.மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 04636 – 290384, 9. ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 04633 – 270124,10.கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 04634 – 240428.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.