மதுரை மாநகர் முழுவதும் குடிநீரில் தூசி நோய் பரவும் அபாயம். துரித நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி..

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகள் பல்வேறு பகுதிகளில் குழாய் மூலமாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் குடிநீரில் வடிகட்டி எடுத்தாலும் துரு போன்ற தூசிகள் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர். நோய்த்தொற்றும் பரவும் முன் நடவடிக்கை எடுக்குமா மதுரை மாநகராட்சி

 செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..