செங்கம் தொகுதி திமுக வேட்பாளர் தபால் வாக்கு செலுத்தும் அரசு ஊழியர்களுக்கு வேண்டுகோள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதியில் கடந்த 06-04-2021 அன்று நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் தபால்_வாக்கு செலுத்தும் வாக்காளர்கள், வாக்கு எண்ணிக்கை நாளான 02-05-2021 ஞாயிற்றுக்கிழமை வரை தங்களுக்கான கால அவகாசம் இருந்தாலும், அஞ்சல் துறையின் மூலமாக வாக்கு செலுத்த வேண்டியுள்ளதால் அதில் கால தாமதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, தபால் வாக்கு செலுத்த உள்ள வாக்காளர்கள் இன்று 28-04-2021 புதன்கிழமைக்குள் தங்களது வாக்கினை கட்டாயம் செலுத்தினால் தான் ஜனநாயக கடமை நிறைவேறும். எனவே, காலதாமதம் இன்றி வாக்களிக்க வேண்டும் என்று செங்கம் தொகுதி திமுக வேட்பாளர் மு.பெ.கிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..