சுரண்டை பகுதியில் நாடார் வாலிபர் சங்கம் சார்பில் இலவச கபசுர குடிநீர் வழங்கும் முகாம் ஏப்.26 திங்கள் கிழமை துவங்கி 27,28 ஆகிய தினங்களில் தொடர்ந்து நடைபெற்றது. தென்காசி மாவட்டம் சுரண்டையில் நாடார் வாலிபர் சங்கம் சார்பில் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு இலவச கபசுர குடிநீர் வழங்கும் முகாம் சுரண்டை பொன்ரா மருத்துவமனை டாக்டர் பொன்ராஜ் ஆதரவுடன் ஏப்.26 முதல் துவங்கி 27,28 ஆகிய நாட்களில் நடைபெற்ற இந்த முகாமினை வசந்த் அன்கோ உரிமையாளரும் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆகிய விஜய் வசந்த் வசந்த் இலவச கபசுர குடிநீர், மாஸ்க் மற்றும் சானிடைசர் வழங்கி துவக்கி வைத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்புத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு சுரண்டை தொழில் அதிபர் எஸ் வி கணேசன் தலைமை வகித்தார், தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும் தென்காசி சட்டமன்ற தொகுதி வேட்பாளருமாகிய எஸ் பழனி நாடார், நாட்டமை தங்கையா நாடார், மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலன் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் பன்னீர் செல்வம், ரத்தினம்,தங்கராஜ், மனோகர், செல்வமணி, கண்ணன், கணேசன், பிரபு,, டயர் செல்வம், ராமர், சங்கர், முருகன், ராஜேந்திரன், சுகந்நா, மாரியப்பன், தவமணி சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.