4
மதுரை பெருங்குடியில் பைக்கில் சென்ற வாலிபர் தவறி விழுந்து பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மதுரை அருகே பரம்புப்பட்டி நாயுடு தெருவை சேர்ந்தவர் ரவி செல்வம் மகன் முருகேசன்20. இவர் பரம்புப்பட்டியில் இருந்து பெருங்குடி செல்லும் சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார் .அப்போதுகட்டுப்பாட்டைஇழந்து நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்தவிபத்து குறித்து பெருங்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.