4
மதுரை விளாங்குடியில்சென்ற பெண்ணிடம் செயின் பறித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.பரவை கம்பன் தெருவை சேர்ந்தவர் கற்பகவல்லி 48. இவர் விளாங்குடி விவேகானந்தர் தெரு இரட்டை பாதை ரோட்டில் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத நபர்கள் அவர் அணிந்திருந்த பதினொன்றரை பவுன் தங்க நகையை பறித்துச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கற்பகவல்லி கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின் பறித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.