அதிகாலையில் வீட்டு வாசலில் நின்ற பெண்ணிடம் செயின் பறிப்பு .

மதுரை திருப்பரங்குன்றத்தில் அதிகாலையில் வீட்டு வாசலில் நின்ற பெண்ணிடம் செயின் பறித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.திருப்பரங்குன்றம் புதுக்குளம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் ருக்மணி 57. இவர் வீட்டு வாசலில் அதிகாலை நின்ற போது அந்த வழியாக வந்த மர்ம ஆசாமி ருக்மணி அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர் .இந்த சம்பவம் தொடர்பாக ருக்மணி திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செயின் பறித்த ஆசாமியை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..