தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை; ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது-எம்எல்ஏ பூங்கோதை அறிக்கை…

ஆலங்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா 19.11.2020 காலை 6 மணியளவில் உடல்நலக் குறைவு காரணமாக திடீரென மயங்கி விழுந்ததால் பணியாளர்களால் நெல்லை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்டது. அப்போது இரத்த பரிசோதனையில் உடலில் இரத்தம் உறையும் தன்மை குறைவாகவும், சர்க்கரை அளவு குறைவாகவும் இருந்தது கண்டறியப்பட்டு மூளை, நெஞ்சு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.நடந்த இந்த சம்பவம் குறித்து “எம்எல்ஏ பூங்கோதை தற்கொலை முயற்சி” என ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனை எம்எல்ஏ பூங்கோதை மறுத்துள்ளார்.மேலும் ஊடகங்களில் தவறான செய்தி வெளியாகி உள்ளதாகவும்,இது மிகுந்த வேதனை அளிப்பதாகவும் எம்எல்ஏ பூங்கோதை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 15 ஆண்டுகள் அரசியலில் டாக்டர். கலைஞர் தன்னை அமைச்சராக நியமித்து அழகு பார்த்தார் எனவும், அப்போது எவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் என்னை தன் மகளைப் போல் பாசத்துடன் நடத்தினாரோ, அதே போல கழகத் தலைவர் அண்ணனும் என் மீது பாசமாக இருக்கிறார். எனக்குச் சட்டமன்ற உறுப்பினராக, மாநில மருத்துவ அணி தலைவராக பணியாற்ற வாய்ப்பளித்து என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். தற்போது சென்னை அப்போலோ மருத்துவமனையில் தனக்கு ஏற்பட்ட திடீர் மயக்கத்திற்கான மருத்துவ காரணங்களை அறிய அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், எனக்கு மட்டுமல்ல,என் தந்தைக்கும் எனக்கும் முகவரியும் முன்னேற்றமும் தந்தது இந்த மாபெரும் ஜனநாயக இயக்கமான தி.மு.க. என எம்எல்ஏ விளக்கமளித்துள்ளார்.இத்தகைய சூழலில் கழகத்திற்கு ஊறுவிளைவிக்கும் வண்ணம் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களை ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை கேட்டுக்கொண்டுள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்தி

புனித ரமலான் வாழ்த்துக்கள்..