மதுரையில் பிரபல தொழிலதிபர் பிறந்த நாளை முன்னிட்டு சமூக இடைவெளி இல்லாமல் முக கவசம் இல்லாமல் அரசின் விதிமுறைகளை மீறி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

 மதுரையை மையமாக கொண்டு பிடிஆர் நிறுவனம் சார்பில் மதுரையில் பல்வேறு இடங்களில் காப்பி மற்றும் டீ மற்றும் பால் பண்ணை தனியார் விடுதிகள் உணவகங்கள் நடத்தி வரும் பி.டி.ஆர் தொழிலதிபர் டேனியல் தங்கராஜ் அவரது 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி உள்ள அவரது சொந்த விடுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பிறந்தநாள் விழாவில கலந்துகொண்டனர்.

இதில் தமிழக அரசின் விதிகளை மீதி கூட்டம் அதிகமாக உள்ளதாகவும் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் சிலர் முக கவசம் அணியாமல் இந்த விழாவில் கலந்து கொண்டனர். கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் இந்த பிறந்தநாள் விழாவில் கொரோனா பரப்பும் அபாய நிலையில் உள்ளது…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..