பெரியகுளத்தில் கொரானா நோயாளிகளுக்காக தனி சித்தா சிகிச்சை மையம் துவக்கம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே நல்லகருப்பன்பட்டி தனியார் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை முதல் கொரோணா நோயாளிகளுக்காக அரசு சார்பில் தனி சித்தா சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 100 படுக்கை வசதிகள் உள்ளது .சிகிச்சை பெறும் நோயாளிகள் இங்கு அனுமதிக்கப்படுகின்றனர் மேலும் இங்கு இரண்டு சித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் உள்ளனர். தற்போது 50 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கபசுரக் குடிநீர், வெஜிடேபிள் சூப் ஜூஸ், வழங்கப்படுகிறது. மேலும் காலை மதியம் இரவு ஆகிய மூன்று வேளைகளில் மூலிகைகள் கலந்த உணவுகள் வழங்கப்படுகிறது என இங்கு பணிபுரியும் சித்த மருத்துவர் செந்தில் குமார் கூறுகிறார்

சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..