வாணியம்பாடி உழவர் சந்தை பகுதியில் நகராட்சி மேல் நீர் தேக்க தொட்டி அருகே தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து 7வயது சிறுவன் உயிரிழப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உழவர் சந்தை பகுதியில் நகராட்சி சார்பில் மேல் நீர் தேக்க குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது இந்த தொட்டியின் அருகே உள்ள காவக்கார பகுதியில் வசித்து வருபவர் லேட் சங்கர் இளவரசி தம்பதியினர் இவரது 7 வயது சிறுவன் ஹரிஷ் இந்த தொட்டி அருகே விளையாடிக் விளையாடிக் கொண்டிருந்தான். குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சரி செய்யும் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் ந வாணியம்பாடியில் 20 மில்லி மீட்டர் அளவுக்கு கனமழை பெய்தது இதனால் தண்ணீர் குழாய் சரி செய்ய தோண்டப்பட்ட குழி முழுவதும் தண்ணீர் தேங்கியதால் அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். உடனடியாக அப்பகுதி மக்கள் மற்றும் உழவர் சந்தை பகுதியில் இருந்த பொதுமக்கள் குழந்தையை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்த போது குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர் தொடர்ந்து இது குறித்து வாணியம்பாடி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment.