மதுரையில் மது பானங்கள் கொள்ளை; மதுப் பிரியர்கள் கை வரிசை!

அரசு மதுபானக் கடையில் மது பானங்கள் கொள்ளை  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மதுரை மாவட்டம் பைபாஸ் சாலை எல்லிஸ் நகர் 70 அடி சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான மதுபான கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் மேலே துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் சுமார் 26 ஆயிரம் மதிப்புள்ள 2375 மில்லி அளவு கொண்ட இரண்டு அட்டைப் பெட்டிகளை எடுத்துச் சென்றுள்ளார்கள். கொள்ளை குறித்து அப்பகுதி சிசிடிவியை  ஆராய்ந்து வருகின்றனர். மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..