4
புதியதாக வரையறுக்கப்பட்ட லாக்டவுன்: தமிழகம் 8 மண்டலமாக பிரிப்பு; எந்தெந்த மாவட்டங்கள் மண்டலங்கள் ஒர் பாா்வை: ஒரே மண்டலத்திற்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவை இல்லை…
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் நுழையவோ அல்லது தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லவும் 8 மண்டலத்திற்கு இடையேயும் செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம் தேவை.
1வது மண்டலம்!
- கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் மற்றும் திருப்பூர்.
2வது மண்டலம்!
- தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி.
3வது மண்டலம்!
- விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி.
4வது மண்டலம்!
- நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை.
5வது மண்டலம்!
- திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம்.
6வது மண்டலம்!
- தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி.
7வது மண்டலம்!
- காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு.
8வது மண்டலம்!
- சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி.
மண்டலம் 7 மற்றும் 8 தவிர்த்து அனைத்து மண்டலங்களிலும் 50 சதவீத பேருந்து போக்குவரத்து 60 சதவிகித இருக்கைகளுடன் செயல்படும்.
அனுமதிக்கப்பட்ட இனங்களுக்கு தவிர மண்டலங்களுக்கு இடையேயும் வெளி மாநிலங்களுக்கும் பேருந்து போக்குவரத்து தடை தொடர்கிறது.
வருகிற 08/06/20 தேதி முதல்,
- தேநீர் கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அனுமதி.
- ஹோட்டல்களிலும் வாடிக்கையாளர்கள் அனுமதி.
- வாடகை மற்றும் டாக்ஸி கார்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பயணிகள் மட்டுமே அணுமதி.
- ஆட்டோகளில் மற்றும் சைக்கிள் ரிக்ஷாவில் 2 பயணிகளுக்கு அனுமதி.
- அனுமதிக்கப்பட்ட ஹோட்டல் மற்றும் அழகு நிலையங்கள் முடிதிருத்தும் நிலையங்களில் குளிர்சாதன வசதி இருந்தாலும் கட்டாயம் பயன்படுத்தக் கூடாது.
You must be logged in to post a comment.