தேனி அருகே வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் தற்கொலை மூன்று பேர் கைது..
தேனி மாவட்டம் தேவாரம் அருகில் பல்லவராயன்பட்டி சேர்ந்த முருகன் கண்ணகி என்ற தம்பதியருக்கு ராஜேஷ் என்ற மகனும் லாவண்யா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் லாவண்யாவை அதே ஊரைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். சதீஸ் , லாவன்யாவுக்கு மூன்று வயது ஆண் குழந்தை உள்ள நிலையில் சதீஸ் மற்றும் அவரின் பெற்றோரான கோட்டைச்சாமி மனைவி ராணி ஆகிய மூவரும் வரதட்சனை கேட்டு லாவண்யாவை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் லாவண்யாவை சொந்தமான ஏலக்காய் தோட்டத்தை பங்கு கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது இதனால் மனமுடைந்த லாவண்யா அரளி விதையை அரைத்து சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை அறிந்த லாவண்யாவின் குடும்பத்தினர் மகளின் தற்கொலை குறித்து நியாயம் கேட்க சென்றவர்களை சதீஷ் மற்றும் அவர் பெற்றோர் தகாத முறையில் திட்டியதாகவும் கூறப்படுகிறது லாவண்யாவின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் கோம்பை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
A. சாதிக் பாட்சா, நிருபர் தேனி மாவட்டம்
You must be logged in to post a comment.