நிலக்கோட்டையில் தி.மு.க. சார்பில் 1000 குடும்பங்களுக்கு கொரானா நிவாரண உதவி

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட துள்ளுப்பட்டி, கொங்கர்குளம் ஆகிய 2 கிராமங்களில் உள்ள 1000 குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான அரிசி, பருப்பு , காய்கறிகள் மற்றும் மிளகாய் பொடி உள்ளிட்ட உணவு பொருட்கள் தி. மு. க நிலக்கோட்டை பேருராட்சித் துணைச் செயலாளர் முருகேசன் தனது சொந்த நிதியிலிருந்து வாங்கினார்.

இதனை நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில் சென்று 2 கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று ஊரடங்கு பாதிப்பால் வேலை இழந்தவர்கள் 1000 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் வடக்கு செயலாளர் சௌந்தரபாண்டியன் , நிலக்கோட்டை நகரச் செயலாளர் கதிரேசன், நகர பொறுப்பாளர்கள் ஜோசப், மணி, கட்டாரி , காங்கிரஸ் கட்சியின் நகர பொறுப்பாளர் ஜவகர், ஊர் காலாடி கருப்பையா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..