Home செய்திகள் 144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை….

144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை….

by mohan

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவக்கூடும் என்பதால் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையின் மூலமாக பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்றுவரை 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்த 8216 நபர்கள் மீது 7557 வழக்குகள் பதிவு செய்து அவர்களிடமிருந்து 4031 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!