இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 48 ஊராட்சிகளைச் சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் 300 பேருக்கு கொரானா நிவாரணமாக அரிசி, காய்கறி தொகுப்பை முதுகுளத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.தர்மர் வழங்கினார். மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் மங்களேஸ்வரி, ஆணையாளர் சாவித்திரி,ஒன்றிய துணை தலைவர் கண்ணகி ஜெகதீஷ், வெங்கலக்குறிச்சி ஊராட்சி தலைவர் எஸ்.டி.செந்தில்குமார், விளங்குளத்தூர் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.கலைச்செல்வி ராஜசேகர், ஆப்பனூர் முத்துராமலிங்கம் கொண்டனர்.
You must be logged in to post a comment.