பாம்பனில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா சார்பில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு

இராமநாதபுரம் பாம்பனில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா சார்பில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.முஹம்மது ரஃபயுதீன்கிராத் ஓதி துவங்கி வைத்தார். பாம்பன் ஜூம்மா மஸ்ஜித் இமாம் மவுலவி மஸ்லஹி பாஜில் மன்பஈ வரவேற்றார். பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மாவட்ட செயற்குழு உறுப்பினர் பைசல் கான் முன்னிலை வகித்தார். எஸ்டிபிஐ கட்சி மண்டபம் ஒன்றிய குழு தலைவர் எஸ்.நியாஸ் கான் சிறப்புரை ஆற்றினார். வழக்கறிஞர் எஸ்.ஏ.எஸ் அலாவுதீன் (சென்னை) பேசினார். CAA NRC குறித்து 25 நிமிட ஆவணப்படம் திரையிடப்பட்டு, சந்தேகங்களுக்கு சட்ட விளக்கம் அளிக்கப்பட்டது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ராமேஸ்வரம் செயலாளர் ஜலால் தாலிப் நன்றி கூறினார் .

புனித ரமலான் வாழ்த்துக்கள்..