சாலையில் ஓடும் சாக்கடை நீர். கண்டுகொள்ளாத மாநகராட்சி..

 மதுரை மாவட்டம் பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் பழங்காநத்தம் பிரதான சாலையில் பாதாள சாக்கடையில் இருந்து சாக்கடை நீர் வெளியே வந்து திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலை வழியாக வழிந்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது .மாநகராட்சி அதிகாரிகள் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர் .இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அடைப்பை சரி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..