11
கீழக்கரை வடக்குத் தெரு அல்அமீன் சகோதரர்கள் சார்பாக 4ஆம் ஆண்டு கட்டுரைப் போட்டி சமீபத்தில் நடத்தப்பட்டது.
இந்த கட்டுரை போட்டியில் கீழக்கரையில் உள்ள பல்வேறு தெருக்களில் உள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர். இதற்கான பரிசளிப்பு மற்றும் மார்க்க சொற்பொழிவு விழா வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி வளாகத்தில் பேராசிரியர் ஆசிஃப் முன்னிலையில் (30/12/2019) அன்று நடைபெற்றது.
இப்போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கு பரிசுகளை பல்வேறு வடக்குத் தெரு மக்கள் வழங்கினர்.
You must be logged in to post a comment.