சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து

சிவகாசி அருகே சொக்க விங்கபுரத்தில் சிவகாசியை சேர்ந்த கிரகதுரை என்பவருக்கு சொந்தமான சில்வர் கேப் வெடி தொழிற்சாலை இயங்கி வருகிறது.மாலை தீடிரென வெடி விபத்து ஏற்பட்டு 3 அறைகள் தரை மட்டமாயின மேலும் காற்று வேகம் அதிகமாக இருப்பதால் தீ மளமளவென தீ பரவியது. மேலும் சம்பவ இடத்திற்க்கு தீயணைப்பு விரைந்து சென்று தீயை அணைத்து வருகின்றனர். சம்பவம் குறித்து வச்சக்காரப் பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இடிந்த கட்டிட இடுபாடுக்குள் ஏதும் தொழிலாளர்கள் இருக்கிறார்களா என வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் . செய்தி வி காளமேகம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..