திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்த பரிதாபம்..

சின்னாளபட்டி அண்ணாமலையார் mills colony அருகே தேசிய நான்குவழிச்சாலையில், இன்று அதிகாலை 2.30 மணி அளவில் திருவள்ளுவர் மாவட்டம் கோனசமுத்திம் என்ற பகுதியைச்சேர்ந்த சேர்ந்த, தயாளன் வயது 40 என்பவர் மீது மதுரை-திண்டுக்கல் நோக்கி வந்த அடையாளம் தெரியாத ஏதோ ஒரு வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், அந்த நபர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி இறந்து விட்டார்.

விசாரணையில் இறந்தவர் மன நிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவருகிறது, இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், மேற்படி விபத்து குறித்து அம்பாத்துரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..