வேடசந்தூர் தாலுகா பாறைபட்டியில் ரயில்வே பாலம் அமைக்கும் பனியில் ஈடுபட்டிருந்த போது விபத்து ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம்..

திண்டுக்கல் மாவட்டம் கோவில்பட்டி அருகே பாறைப்பட்டியில் ரயில்வே பாலம் அமைக்கும் பனி நடந்து வருகிறது.  இதில் கூலித் தொழிலாளர்கள் மணிகண்டன் (25) மணிகண்டன் (30) ஆகியோர் வேலைசெய்து வந்தனர். புதன் கிழமை அன்று பனிக்கு இடையூறாக இருந்த பாறையை உடைப்பதற்காக வெடி வைப்பதற்கு துவாரம் போட்ட பொழுது விபத்து ஏற்பட்டு மணிகண்டன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார் மற்றொரு மணிகண்டன் என்பவர் பலத்த காயங்களுடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இன்று இறந்தவரின் உறவினர்கள் எரியோடு காவல் நிலையத்தின் முன்பு தங்களின் துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் கதறிஅழுத காட்சி அங்கு கூடியிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..