சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 12.5 மணிக்கு புறப்பட்ட west coast விரைவு ரயிலில் போதைப் பொருள் கடத்துவதாக அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படையினர் ஆய்வாளர் முகேஷ் குமார் ராஜக் தலைமையிலான குழு அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து காட்பாடி வரை ஓடும் ரயிலில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ போதைப்பொருள் மற்றும் அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 7 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்:- கே.எம்.வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.