அய்யம்பாளையம் மருதாநதி அணை நிரம்பியதால் பாசனத்திற்காக நீர் திறப்பு…

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் மருதாநதி அணையின் நீர்மட்டம் 18 அடியை எட்டியதால் பகுதி விவசாயிகள் நலன் கருதி பாசனத்திற்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய் இன்று (28/11/2018) மதியம் 12 மணியளவில் பாசனத்திற்காக நீரை திறந்து வைத்தார்.

அதன் பிறகு 2 கி.மீ தூரத்தில் உள்ள ஏ.கே.ஜி நகரை பார்வையிட சென்றார் சாலை சரியில்லை என்பதால் காரிலிருந்து ஜீப் மூலம் அங்கு சென்றார். அங்கு பொது மக்கள் குண்டும் குழியுமான சாலையை சீரமைத்து தார்ச்சாலை போட்டு தரவேண்டி கோரிக்கை விடுத்தனர் இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மாவட்ட செய்தியாளர்:-பக்ருதீன்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..