வாணியம்பாடி ரயில்வே சுரங்கப்பாதை அமைக்காத்தற்கு உயர்நீதி மன்றம் கண்டனம்..

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த பரூக் அகமது கடந்த 1 ஆண்டுகளுக்கு மேலாக வாணியம்பாடி நியு டவுன் ரயில்வே கிராசிங் கேட் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் துன்பப்பட்டு வருகின்றனர். உடனடியாக ரயில்வே சுரங்க பாதை அமைக்க உத்தரவிட வேண்டி பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணி பிரசாத் ஆகியோர் கொண்ட பெஞ்ச் ரயில்வே சுரங்க பாதை அமைப்பது குறித்து ஆய்வு நடத்தி 2 வாரத்தில் பதில் அளிக்க வாணியம்பாடி நகராட்சி ஆணையர் பொதுப்பணி துறை மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார். மேலும் இவ்வழக்கை நவம்பர் 8-ந்தேதி தள்ளி வைக்கப்பட்டது.

வேலூர் மாவட்ட செய்தியாளர்:-கே.எம்.வாரியார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..