நிலக்கோட்டையில் தற்போது அமைந்துள்ள காவலர் குடியிருப்பு புதர்கள் மண்டி சுவர்கள் இடிந்து சுடுகாடு போல் காட்சி அளிக்கிறது மற்றும் இந்த புதர்கள் மண்டி போய் கிடக்கும் காவலர் குடியிருப்பு நிலக்கோட்டையில் ஊருக்கு உள்ளேயே முக்கியமான பகுதியில் கேட்பாரற்று கிடக்கிறது குறிப்பிடத்தக்கது,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள காவல் நிலையம் தாலுகா காவல் நிலையம் ஆகும். மற்றும் அதனோடு ஒரு மகளிர் காவல் நிலையம், மேலும் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் இவை அனைத்தும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ள பெருமை நிலக்கோட்டை காவல் நிலையத்தை மட்டுமே சாரும்.
இந்நிலையில் நிலக்கோட்டை DSP அலுவலக கட்டுப்பாட்டில் நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி, விளாம்பட்டி, அம்மையநாயக்கனூர், விருவீடு மற்றும் நிலக்கோட்டையில் உள்ள மகளிர் காவல் நிலையம் இவை அனைத்தும் அடங்கும். இதில் DSP கட்டுப்பாட்டில் உள்ள அம்மையநாயக்கனூர், விளாம்பட்டி, வத்தலக்குண்டு போன்ற காவல் நிலையத்திற்கு மட்டுமே காவலர்கள் குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது,
இருப்பினும் தலைமை காவல் நிலையமான நிலக்கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு குடியிருப்பு வளாகம் இருந்தும் அது சரியான முறையில் பராமரிக்காத காரணத்தால் கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் புதர்கள் மண்டி போய் காட்சி அளிக்கிறது, தேர்வுநிலை பேரூராட்சியான நிலக்கோட்டையில் அடிக்கடி வரும் வம்பு வழக்குகள், சிறு, பெரு விபத்து, கட்சிகளின் பொதுக்கூட்டம், கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல், அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம், என ஏராளமான பாதுகாப்பு மற்றும் வாகன சோதனை என்று பணிச்சுமை இருக்கும் நிலையில் கூடவே ஒருபுறம் காவலர்கள் பற்றாக்குறை வேறு!. இதனால் சதா எந்நேரமும் குடும்பத்தை மறந்து கடமை ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டிருக்கும் கண்ணியமிக்க காவல்துறையினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதன்மூலம் பொதுமக்கள் மத்தியிலும் அவர்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகின்றன. ஆகவே இந்த குறைகளை களைய நிலக்கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு குடியிருப்பு வளாகம் கட்டித்தர வேண்டியும், காவல் நிலைய வழக்குகளுக்கு ஏற்றவகையில் அதிகளவில் காவலர்களை பணியமர்த்தவும், இப்பகுதியில் இருக்கும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமூக ஆர்வலர் திரு ஜாவேத் அவர்கள் கூறுகையில், “நிலக்கோட்டையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் அமைந்துள்ளது சிவில் மற்றும் குற்றவியல் கோர்ட்டும் இருக்கும் காரணத்தால் எப்போதுமே நிலக்கோட்டை பகுதிகளில் பரபரப்பான சூழ்நிலை தான் இருக்கும்
அப்படி இருக்கும் ஊரில் காவலர் குடியிருப்பு இல்லாத காரணத்தினால் வெவ்வேறு ஊர்களில் குடியிருந்து, காவலர்கள் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் வந்து வேலை செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது, ஆகவே காவலர்கள் நலன் கருதியும் பொதுமக்கள் நலன் கருதியும் உடனடியாக நிலக்கோட்டையில் காவலர் குடியிருப்பு கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்” என்றார்,
மேலும் அந்த பயனற்ற கட்டிடங்களின் கதவுகள் திறந்தே கிடப்பதால், சில சமூக விரோத செயல்களும் நடைபெற்று வருகிறது, மது அருந்துவது போன்ற வேறு சில சமூக விரோத செயல்களும் நடைபெறுகிறது. அருகில் அரசு மகளிர் விடுதி, கல்விநிலையம் ஆகியவை அமைந்துள்ள காரணத்தால் அரசு போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்,
You must be logged in to post a comment.