இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வேலையில்லா இளைஞர்களுக்கு அருமையான வாய்ப்பு ஒன்றை இந்தியன் ஓவர்சீஸ்வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் உருவாக்கியுள்ளது. இந்த பயிற்சி மையம் மூலம் (Refregeration and Air-conditioning) ஃபிரிட்ஜ் ஏர்கன்டிசன் சர்வீஸ் மற்றும் கேஸ் ஏற்றுதல் பயிற்சி இலவசமாக வழங்க இருக்கிறது.
இப்பயிற்சி முகாம் வரும் (11-09-2017)திங்கட்கிழமை ஆரம்பமாகிறது. இப்பயிற்சி காலம் 30 நாட்கள், மற்றும் பயிற்சிக்கான நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5மணிவரை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயிற்சியின் முடிவில் தகுதி சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சி காலத்தில் பயிற்சி பெறும் நபர்களுக்கான காலை, மாலை தேநீர் மற்றும் மதியம் உணவு 30நாட்களும் வழங்கப்படும் என்று அறியப்படுகிறது. இதுபற்றிப மேல் விபரங்களை 9994151700 என்ற அலைபேசி 04567221612 என்ற அலுவலக எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
You must be logged in to post a comment.