கீழக்கரையில் விதிமுறைகளுக்கு முரணாக இருக்கும் மதுபானக்கடைகளை அகற்ற கோரி கீழக்கரை ஜமாஅத்கள்,சமூக அமைப்புகள் சார்பாக இன்று காலை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.
இந்த மனுக்களை *கடற்கரை பள்ளி ஜமா-அத் பரிபாலனக் கமிட்டி,கீழக்கரை நகர் நல இயக்கம்,தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கீழக்கரை வட்டகை நாடார் ஜனோபகார சங்கம்,கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை,வடக்குத்தெரு சமூக நல அமைப்பு,இந்தியா தவ்ஹீத் ஜமாஅத்,அன்பு நகர் முன்னேற்ற சங்கம்,இஸ்லாமிய கல்வி சங்கம்,மக்கள் நல பாதுகாப்புக் கழகம்,மக்கள் டீம்,நுகர்வோர் உரிமைப் பாதுகாப்புக் குழு*ஆகிய சமூக அமைப்புகள் சார்பாக மனுக்களை கிழக்கு தெரு ஜமாஅத் துணைப்பொருளாலரும் சமூக ஆர்வலருமான முகம்மது அஜிகர்,மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் செயலாளர் முகைதீன் இப்ராகீம்,பொருளாளர் முகம்மது சாலிஹ் ஹூசைன்,செயற்குழு உறுப்பினர் செய்யது முகம்மது பாதுஷா,சமூக ஆர்வலர்கள் அப்தாகீர்,சேகு ஜலாலுதீன் ஆகியோர் வழங்கினார்கள்.
You must be logged in to post a comment.