அனுமதியின்றி மணல் கடத்திய மூவர் கைது..

கடந்த 20.08.17 ம் தேதி அன்று காலை எமனேஸ்வரம் போலீஸ் பார்ட்டியினர் ரோந்து சுற்றி வரும்போது, வளையனேந்தல் பாலத்தின் அருகே எவ்வித அனுமதியுமின்றி, மணல் கடத்திய மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் 1) மலைசாமி த/பெ சக்கரை, காந்தி நகர், எமனேஸ்வரம். 2) சிவகுமார் த/பெ கந்தசாமி, அயன் கரிசல் குளம், தூத்துக்குடி. 3) முருகானந்தம் த/பெ அய்யாதுரை, காந்தி நகர், எமனேஸ்வரம். ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த வேலைக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மணல் அள்ளும் இயந்திரம் (JCB, TN 65 D 0526) மற்றும் இரண்டு டிப்பர் லாரிகள் (TN 65 F 5206, TN 60 8575) ஆகியவற்றை கைப்பற்றி மேல் நடவடிக்கைக்காக எமனேஸ்வரம் காவல் நிலையம் கொண்டு வரப்பட்டது.


புனித ரமலான் வாழ்த்துக்கள்..