கடந்த 20.08.17 ம் தேதி அன்று காலை எமனேஸ்வரம் போலீஸ் பார்ட்டியினர் ரோந்து சுற்றி வரும்போது, வளையனேந்தல் பாலத்தின் அருகே எவ்வித அனுமதியுமின்றி, மணல் கடத்திய மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் 1) மலைசாமி த/பெ சக்கரை, காந்தி நகர், எமனேஸ்வரம். 2) சிவகுமார் த/பெ கந்தசாமி, அயன் கரிசல் குளம், தூத்துக்குடி. 3) முருகானந்தம் த/பெ அய்யாதுரை, காந்தி நகர், எமனேஸ்வரம். ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த வேலைக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மணல் அள்ளும் இயந்திரம் (JCB, TN 65 D 0526) மற்றும் இரண்டு டிப்பர் லாரிகள் (TN 65 F 5206, TN 60 8575) ஆகியவற்றை கைப்பற்றி மேல் நடவடிக்கைக்காக எமனேஸ்வரம் காவல் நிலையம் கொண்டு வரப்பட்டது.
You must be logged in to post a comment.